ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!
ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாட்டுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு...
வருகிற 2026 ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடியோ ஒன்றை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் நிலையில் தேமுதிக ஏற்கெனவே வருகிற ஜனவரி மாதம் தேமுதிக மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், "தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும் மகளிர் அணி சகோதரிகளுக்கும் சார்பு அணி நிர்வாகிகளுக்கும் தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொண்டர்களுக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற ஜனவரி 9 - 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரிலே பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தந்து அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்" என்று பேசியுள்ளார்.
Premalatha Vijayakanth called for a DMDK conference in Cuddalore on Jan. 9
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.