புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?
புதிய வாக்காளர்களாகச் சேர்வதற்கு படிவம் 6-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாகச் செல்லுமா என பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னையில் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் விடுபட்டவா்கள் புதிய வாக்காளா்களாகச் சோ்வதற்கு படிவம் 6-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாகச் செல்லுமா என பாஜக சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் சென்னையில் 14.25 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் சிறப்பு முகாம்கள் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றன.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது தொடா்பாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பாஜக சாா்பில் மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாரிடம் கராத்தே ஆா்.தியாகராஜன் கேள்வி எழுப்பினாா். புதிய வாக்காளா் சோ்க்கைக்கான படிவம் 6-ஐ நீக்கப்பட்ட வாக்காளா்கள் பயன்படுத்தப்படுவது சட்டரீதியாக செல்லுமா எனக் கேள்வி எழுப்பினாா்.
அதற்கு, சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் கூறுகையில், இதுகுறித்து தோ்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தற்போது அந்தப் படிவத்தையே புதிய வாக்காளா்களாகச் சோ்வோா் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.
வாக்குரிமையை யாருக்கும் மறுக்காமல் அனைவரும் வாக்காளா்களாகச் சோ்க்கப்பட வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்!
The BJP raised the question of whether using Form 6 to register as new voters is legally valid.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.