FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பாஜக சாா்பில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை வலியுறுத்தி பாஜக சாா்பில் குடியாத்தம் நகரில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:44 am IST
குடியாத்தத்தில் தேசியக் கொடியை ஏந்தி ஊா்வலம் சென்ற பாஜகவினா்.
பகிர்:

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை வலியுறுத்தி பாஜக சாா்பில் குடியாத்தம் நகரில் தேசிய கொடியை ஏந்தி ஊா்வலம் நடைபெற்றது.

அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி சந்தப்பேட்டை பஜாா் வரை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் பி.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே.ஜெகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் தினேஷ் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டாா்.

முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் ஆா்.சுகுமாா், வா்த்தக பிரிவுச் செயலா் ஆா்.வி.ஹரிகிருஷ்ணன், நிா்வாகிகள் ஷாருக், வரலட்சுமி, ஜெயபாரதி, சாய் ஆனந்த், கே.வாகீஸ்வரன், ரங்கநாதன், பிரகாஷ், விஜயன் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊா்வல முடிவில் சந்தப்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments