உதயநிதி ஸ்டாலின் Photo: X / Udhay
தமிழ்நாடு

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம் திறக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மெரினா கடற்கரை அருகே இரவுநேரக் காப்பகத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை அருகே அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் 2,400 சதுர அடியில் வீடற்றவர்களுக்கான இரவுநேரக் காப்பகம் கட்டப்பட்டுள்ளது.

ரூ. 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த காப்பகத்தில் 80 பேர் ஒரே நேரத்தில் தங்கவும், அவர்களுக்கு தேவையான தலையணை, போர்வைகள், பாய் உள்ளிட்டவை அளிக்கப்படவுள்ளன.

கழிப்பறை, தண்ணீர், மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி, பிற பகுதிகளிலும் தேவையைப் பொறுத்து இதுபோன்ற இரவுநேரக் காப்பகங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் அமைச்சர் கே.என். நேரு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

A night shelter at Marina: Udhayanidhi inaugurated it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாசிவராத்திரி, வார இறுதிக்கு 1,360 சிறப்பு பேருந்துகள்

அதிவேக அரைசதம்..! டி20 உலகக் கோப்பையில் சாதனை படைத்த ஷனாகா!

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

டி20 உலகக் கோப்பை: ஓமனுக்கு எதிராக 225 ரன்கள் குவித்த இலங்கை!

பொதுவேலை நிறுத்தம்: கோவை – கேரள பேருந்து சேவை முடக்கம்!

SCROLL FOR NEXT