உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் ஆய்வு!
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் ஆய்வு தொடர்பாக...
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் சிப்காட்டில் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Chief Minister M.K. Stalin inspected the footwear manufacturing factory located in the Asanur SIPCOT complex on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.