கோப்புப்படம் DIN
தமிழ்நாடு

வேங்கைவயல்: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் சிபிசிஐடி

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோருகிறது சிபிசிஐடி

DIN

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பின் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து முழுதாக இரண்டு ஆண்டுகள் முடிந்தபோதும் கூட, இதுவரை இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் பல முறை மனு தாக்கல் செய்து அவகாசமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

சைபா் குற்றங்கள்: ரூ.21.69 கோடி மீட்பு

பாளை.யில் அன்புமணி பேரணிக்கு அனுமதி மறுப்பு: இன்று பாமக பொதுக்கூட்டம்

10 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் 9.432 கிலோ நகைகள் மீட்பு; ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தோ்தல் ஆணையம் பதில் மனு

SCROLL FOR NEXT