முகப்பு
தமிழ்நாடு

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் 3 கோரிக்கைகள் வைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Updated On : 27 ஜூலை 2025, 9:16 am IST
- X | AIADMK
பகிர்:

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.05 மணிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

Advertisement

Advertisement

அவர் அளித்த கோரிக்கைகளாக,

விவசாயிகளுக்கான கடன் வழங்கும் செயல்முறையில் சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் வழித்தடத்தை சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை மனுவாக சமர்ப்பித்தார். எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதனைப் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

summary

ADMK General Secretary EPS submits petition to PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments