முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியிலுள்ள கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு பற்றி...

Updated On : 28 ஜூலை, 2025 at 8:11 AM
திருச்சியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு... - DIN
பகிர்:

திருச்சியிலுள்ள கேம்பியன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருச்சியிலுள்ள கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டில் பயின்ற 90 மாணவர்கள், 30-வது ஆண்டில் சந்தித்தனர்.

திருச்சியில் ஜூலை 26 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்கள்.

மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் நன்கொடையை கேம்பியன் பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் பால்ராஜிடம் வழங்கினர்.

மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கும் நேரடியாகச் சென்று தங்களுடைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

summary

Alumni of the Campion School Class of 1995 gathered in Trichy to celebrate their 30th Pearl Reunion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.