தமிழ்நாடு

தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்தது பற்றி...

DIN

தென்காசியில் தனியார் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிட்டதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகி ராஜேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பழங்குடியினருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டை

வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT