வேகமாகப் பரவும் எபோலா: காங்கோவில் 930 பேர் பலி!
காங்கோவில் எபோலா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு..
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
Advertisement
Advertisement
நாடு முழுவதும் மொத்தம் 2,344 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 930 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பாகும்.
மே 15 அன்று கிழக்கு காங்கோவில் அறிவிக்கப்பட்ட எபோலா நோய்ப் பரவலானது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.
எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.
இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர். நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
At least 930 people have died in Congo's Ebola outbreak, the country's Ministry of Health said
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.