முகப்பு
தமிழ்நாடு

மதுரை ரெளடி கொலை: 2 தனிப்படைகள் அமைப்பு!

மதுரையில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Updated On : 23 மார்ச், 2025 at 6:31 AM
கோப்புப்படம்
பகிர்:

மதுரை ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடி காளீஸ்வரன், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்தபோது 3 பைக்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மதுரை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ரெளடி காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மதுரையில் ரெளடி காளீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.