முகப்பு
தமிழ்நாடு

முன்கூட்டியே வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக...

Updated On : 6 மே, 2025 at 7:46 AM
கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன.

இதில், 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட்டனர். அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் மே 9-இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு நாள் முன்பே மே 8 ஆம் தேதியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!

முழு கட்டுரையைப் படிக்க →