கும்பக்கரை அருவி கோப்புப்படம்
தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

DIN

தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து குறைந்து வந்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை இருந்தது. மேலும், அருவிப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது, இதனால் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்ல சனிக்கிழமை வனத் துறையினா் தடை விதித்து இருந்தனர்.

பராமரிப்பு பணிகள் இன்று காலை 10 மணிக்குள் நிறைவடையும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT