கும்பக்கரை அருவி கோப்புப்படம்
தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

DIN

தேனி: கும்பக்கரை அருவியில் இன்று(மே 18) காலை 10 மணு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து குறைந்து வந்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை இருந்தது. மேலும், அருவிப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது, இதனால் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்ல சனிக்கிழமை வனத் துறையினா் தடை விதித்து இருந்தனர்.

பராமரிப்பு பணிகள் இன்று காலை 10 மணிக்குள் நிறைவடையும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT