மழை (கோப்புப்படம்) Din
தமிழ்நாடு

டிட்வா புயல்: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும்.

இணையதளச் செய்திப் பிரிவு

டிட்வா புயல் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இன்று(நவ. 30)அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று(நவ. 30), வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain will continue in 18 districts including Chennai for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT