முகப்பு
தமிழ்நாடு

டிட்வா புயல்: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும்.

Updated On : 30 நவம்பர், 2025 at 8:08 AM
மழை (கோப்புப்படம்) - Din
பகிர்:

டிட்வா புயல் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இன்று(நவ. 30)அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று(நவ. 30), வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Rain will continue in 18 districts including Chennai for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.