முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை(டிச. 1) பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் திங்கள்கிழமை(டிச. 1) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Updated On : 30 நவம்பர், 2025 at 9:09 PM
- ANI
பகிர்:

புதுச்சேரியில் திங்கள்கிழமை(டிச. 1) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகல் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரி அருகே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. இது, வடக்குத் திசையில் நகர்ந்து திங்கள்கிழமை(டிச. 1) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

Schools in Puducherry will be closed tomorrow (Dec. 1)!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.