பேரவைத் தலைவர் மு.அப்பாவு TNDIPR
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்து வருகிறார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் இன்று காலை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இன்று இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் இன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

இரண்டாம் நாளான புதன்கிழமை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

மூன்றாம் நாளான அக். 16-ஆம் தேதி கூட்டத்தில் 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

நான்காம் நாளான அக். 17-ஆம் தேதி, கூட்டத் தொடரில் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் அக்டோபா் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். தொடா்ந்து 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

Tamil Nadu Legislative Assembly session has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை: விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் மூடல்!

முதல் நாளிலேயே நின்றுபோன சென்னை வொண்டர்லா சவாரிகள்!

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

புதிய கண்ணோட்டத்தில் உலகைச் சுற்றி 2025 - புகைப்படங்கள்!

ஐயப்ப பக்தா்கள் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT