செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்பு
செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு...
செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதன்பின்னர் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்று முடிவெடுப்பது தொடர்பாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
அதன்படி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் என்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் "இன்றைய நிலவரப்படி அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கட்சியின் கொறடா கூறியபடிதான் அந்த கட்சியின் உறுப்பினர்களை பேச அனுமதிப்பேன்" என்றார்.
TN Budget Session will be upto september 8: speaker JCD prabhakar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.