சசிகலா கட்சியில் இணைந்த ஐயப்பன்: மீண்டும் உசிலம்பட்டியில் போட்டி!
சசிகலா கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் குறித்து...
உசிலம்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து அண்மையில் ராஜிநாமா செய்த ஐயப்பன், மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார்.
சசிகலா முன்னிலையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஐயப்பன் இன்று(ஏப். 1) இணைந்தார்.
சசிகலா முன்னிலையில் அஇபுதமமு கழகத்தில் ஐயப்பன் இன்று இணைந்த நிலையில், உசிலம்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் வி.கே. சசிகலா இன்று வெளியிட்டார்.
அதில், உசிலம்பட்டி, அரவக்குறிச்சி, ஆம்பூர், அம்பாசமுத்திரம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி அதிமுக உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கியபோது அவருடன் தொடர்ந்து பயணித்தவர் ஐயப்பன். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து இணைந்தார். மேலும், இவர்கள் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்தனர்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டபோதிலும், ஐயப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால், ஐயப்பன் பெரும் வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், மதுரை அருகே செக்கானூரணியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஐயப்பன், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்துள்ளார்.
Ayyappan, who recently resigned as the MLA for the Usilampatti constituency, is once again contesting in the same constituency on behalf of Sasikala's All India Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.