நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு அழுத ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர்!
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் 6 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் 6 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதால் 9 பேருக்கும் உச்சபட்சமாக தூக்குதண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என சிபிஐ வாதத்தை முன் வைத்த நிலையில், எந்த தவறும் செய்யாத இருவரையும் காவல்துறையினர் கொடூரமாக அடித்து உயிரிழக்கவைத்துள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதி முன்பாக ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு அழுது முறையிட்டனர்.