தமிழ்நாட்டின் எல்லைச்சாமி யார்? ஆ. ராசா
தமிழ்நாட்டின் எல்லைச்சாமியாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக எம்.பி. ஆ. ராசா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லைச்சாமியாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக எம்.பி. ஆ. ராசா கூறியுள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் ஆ. ராசா எம்.பி. பேசுகையில், "தமிழ்நாட்டின் உரிமைக்காக எப்படி அண்ணா போராடினாரோ, அதேபோல பிகாரின் உரிமைக்காகப் போராடிய நிதிஷ் குமார் இன்று காணாமல் போய்விட்டார். மராத்திய பெருமை பேசியவர்கள் இன்றில்லை. உத்தர பிரதேசத்தை பிடித்து விட்டனர், மத்திய பிரதேசத்தை பிடித்து விட்டனர்.
இப்படி மேலிருந்து ஒவ்வொன்றாக, தில்லியிலிருந்து பிடித்துக்கொண்டு வருகின்றனர். இந்துத்துவா, ஜெய் ஸ்ரீராம், பாரத மாதா கீ ஜே என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வருகின்றனர்.
Advertisement
எங்கெல்லாம் முடியவில்லையோ, அங்கெல்லாம் தோளின் மீது ஏறிக் கொள்கின்றனர். ஆந்திரத்தில் முடியவில்லை என்பதால், சந்திரபாபு நாயுடு தோளில் ஏறிவிட்டனர். அதேபோல, திருத்தணி வரையில் வந்து விட்டனர்.
ஆனால், அங்குதான் உள்ளே விடாமல் எல்லைச் சாமியாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிற்கிறார். இவர் தனியொரு ஆள் இல்லை - இவர் பின்னால் அண்ணா, கருணாநிதி என ஒரு தத்துவமிருப்பதாகப் புரிந்து கொள்கின்றனர்.
அதன் பின்னர்தான், தமிழ்நாட்டிலிருந்து ஒரு இளிச்சவாயனை கண்டுபிடிக்கின்றனர். அவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் தோளில் ஏறி, ஒளிந்து ஒளிந்து வருகின்றனர்.
ஆனால், இது அண்ணா ரத்தம்; கருணாநிதி ரத்தம். ஆகையால், இங்கே உள்ளே வர முடியாது" என்று தெரிவித்தார்.