முகப்பு
தமிழ்நாடு

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது தொடர்பாக..

Updated On : 21 ஏப்ரல் 2026, 12:25 pm IST
கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்! - படம்: திமுக
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஏப். 21) நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கரும்பு ஜூஸ் போட்டும், ஆட்டோவில் பயணித்தும் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

கடும் வெய்யிலையும் பாராமல் அரசியல் கட்சித் தலைவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

summary

With the Legislative Assembly election campaign set to conclude at 6 PM this evening, Chief Minister Stalin is actively engaged in canvassing for votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments