ரூ. 500 கோடி நன்கொடை! சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட திமுக அழுத்தம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடுமாறு திமுக அழுத்தம் கொடுத்ததாக லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு
சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபடுமாறு திமுக அழுத்தம் கொடுத்ததாக லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளருடன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசுகையில், "திமுகவின் கடினமான காலங்களில் என் தந்தை, நட்புறவின் காரணமாக கருணாநிதிக்கு ரூ. 500 கோடி நன்கொடை அளித்தார்.
பின்னர், லாட்டரிகளுக்கு சட்டபூர்வமான நாங்கள் அனுமதி கோரியபோது, அதில் திமுக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி, மாநிலத்துக்கு சுமார் ரூ. 7,000 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டித் தந்திருக்கும்.
Advertisement
Advertisement
சட்டபூர்வ அனுமதிக்குப் பதிலாக, சட்டவிரோதமாக விற்பனை செய்யுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்து விட்டோம்.
ஏனெனில், ஒருபோதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று தொடக்கத்திலிருந்தே நாங்கள் தெளிவாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
DMK Pressured to Engage in Illegal Lottery Sales: LJK Party Leader Jose Charles Martin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.