திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் நாள் இன்று! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாக்களித்த பின் பேட்டி...
திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் நாள் இன்று என வாக்களித்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
Advertisement
இன்றைய தினம் இந்த ஆட்சியின் சாதனைக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆட்சிக்கும் மதிப்பெண் வழங்கும் நாளாகும்.
இந்த கூட்டணி கட்சியின் விசிக வேட்பாளர் எல்.இ.ஜோதிமணிக்கு பானை சின்னத்தில் வாக்களித்துள்ளேன்.
எங்களுக்கு மக்களுடைய ஆதரவு எழுச்சியாக உள்ளது. உங்கள் ஆட்சியில் மக்களை நாடி அரசு அலுவலகர்கள் செல்லும் சூழல் உள்ளது. மக்களை எளிமையாக சந்திக்கும் முதல்வர். எங்கள் கூட்டணி கட்சியினருக்கு அதிக அளவு ஆதரவு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், இளம் வாக்காளர்களுக்கு இலவசப் பேருந்து, லேப்டாப் வழங்குதல், தவப் புதல்வன் திட்டம் கொணட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆதலால் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் 70% இளைஞர்களை திமுகவில் சேர்த்துள்ளோம். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'போல தமிழக முழுவதும் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று கூறினார்.
பேட்டியின்போது ஒன்றியச் செயலாளர் ஜெயபாண்டியன், ஆசிரியர் மனோகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும் திட்டக்குடி அதிமுக வேட்பாளர் நாக. முருகுமாறன் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் எல்இபி ஜோதிமணி குடும்பத்தினருடன் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பண்ருட்டி தொகுதி விசிக வேட்பாளர் அப்துல ரகுமான் தனது வாக்கினை குடும்பத்தினருடன் ஆர்சி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.