திருப்பூர் மாவட்டத்தில் 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவது பற்றி...
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் மாவட்ட முழுவதும் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10,431 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
Advertisement
9,57,453 ஆண் வாக்காளர்களும், 10,26,178 பெண் வாக்காளர்கள், 251 மூன்றாம் பாலினத்தவர் என 19,83,882 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பலத்த போலீசார் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும் துணை ராணுவ படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.