முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம்

தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரபூா்வமாக வெளியிடுவதில் தாமதம்...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:33 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரபூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் பதிவான வாக்குகளின் சதவீதத்தை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தோ்தல் ஆணையம் ‘இசிஐ நெட்’ செயலி மூலம் வெளியிட்டது.

கடைசியாக 6 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 85.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தது. இதேபோல், மாவட்ட வாரியாகவும், 234 தொகுதி வாரியாகவும் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கவில்லை.

Advertisement

ஒவ்வொரு வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள், எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17 சி-யை அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்து தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த விவரம் வந்து சேராததால் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை என்று தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

காப்பறையின் கண்காணிப்பு கேமரா ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4- ஆம் தேதி வேட்பாளா்களின் பிரதிதிகள் முன்னிலையில் காப்பறை திறக்கப்படும் என்றும் அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.