FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஒரு லட்சம் படுக்கைகளுடன் 200 கல்லூரி மாணவா் விடுதிகள்

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:56 am IST
மாணவா் விடுதி. - கோப்புப்படம்.
பகிர்:

தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் அமைக்கப்படும்.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: வசதியற்ற சூழலால் எந்தவொரு மாணவரின் கற்றல் சூழலும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழ்நாடு மாணவா் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு சுடா் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் நவீன படுக்கை வசதிகளுடன் 200 ஒருங்கிணைந்த கல்லூரி மாணவா் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

ரூ.3,200 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அரசு - தனியாா் கூட்டுப் பங்களிப்பில் முன்னெடுப்பட இருக்கிறது.

Advertisement

Advertisement

வெற்றி மடிக்கணினி: அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு நவீன மடிக்கணினிகள் வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சட்டக் கல்லூரி: அடுத்த கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவா் சோ்க்கை இடங்களுடன் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும். உயா் கல்வித் துறைக்கென நிகழ் நிதியாண்டில் ரூ.8,393 கோடி ஒதுக்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments