FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!

தமிழக பட்ஜெட் 2026-ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:37 am IST
அரசுப் பள்ளி
பகிர்:

அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என்.மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அவர் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில்,

Advertisement

Advertisement

குழந்தைகள் படிக்க பள்ளிகல் தரமான உள்கட்டமைப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து முதல் கட்டமாக சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது இதன்படி, தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர், கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்டவை உறுதி செய்யப்படும்.

முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.

2514 துவக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 நிகர்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்பட 3,734 பள்ளிகள், ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு!

11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments