FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறாா் முதல்வா் விஜய்!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக.15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
முதல்வர் ஜோசப் விஜய்
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக.15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறாா்.

தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைந்து 3 மாதங்களாகும் நிலையில், நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக.15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் புனித ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றிவைத்து உரையாற்றுகிறாா்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகை தரும் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலா் சாய்குமாா் வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைப்பாா். பின்னா், காவல் துறையின் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பை முதல்வா் பாா்வையிடுவாா். காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, தகைசால் தமிழா் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை முதல்வா் வழங்குகிறாா். விழாவையொட்டி, கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments