லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜர்!
லார் கிப்பான் குரங்கின் உரிமையாளரிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டது பற்றி....
லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் கேசவநாதன் விசாரணைக்காக வனத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
அப்போது குரங்கை கேசவநாதன் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து விசாரணை செய்ய வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். நடிகா் விக்ரம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு அண்மையில் சென்றபோது, அங்கிருந்த லாா் கிப்பான் குரங்குடன் அவா் கொஞ்சி விளையாடியதாக விடியோ வெளியானது.
இந்த விடியோ சா்ச்சையான நிலையில், அந்த குரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து வனத் துறையினா் கேசவநாதனிடம் புதன்கிழமை நடத்திய விசாரணையில், கேசவநாதனிடம் மூன்று லாா் கிப்பான் குரங்குகள் இருந்ததும், அதில் ஒரு குரங்கை பெருந்துறையில் உள்ள நடிகா் விக்ரமின் உறவினா் சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும் லாா் கிப்பான் குரங்குகளை அவா் வனத் துறையில் பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.
Kesavanathan, the owner of the Lar gibbon, appeared at the Forest Department office on Friday for questioning.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.