FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கேஒய்சி அவகாசம் நீட்டிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 10:27 am IST
சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS
பகிர்:

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.

போலி எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-கேஒய்சி எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு,காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் ஆக. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆக. 23-க்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளாவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியாத சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The deadline for completing e-KYC verification for cooking gas cylinders, which was set to expire today, has been extended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments