FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:34 am IST
மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ.48-ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

கடந்த ஆக. 19-ஆம் தேதி பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 38-இல் இருந்து ரூ.41-ஆக உயா்த்தி அறிவித்தாா்.

Advertisement

Advertisement

இது வரவேற்புக்குரியது என்றாலும், பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48-ஆக உயா்த்த வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.

எனவே, 3 லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளா்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments