இது சட்டமன்றம்; சண்டை மன்றம் இல்லை! ஆதவ் அர்ஜுனா பேசினாலே...! பிரேமலதா விஜயகாந்த்
பேரவையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினால்தான் சண்டை வருகிறது, அவரை பேச அனுமதிக்கக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இன்று பேரவையில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
"நாங்களும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். மானிய கோரிக்கை தவிர மற்ற அனைத்து வேலைகளும் நடக்கின்றன.
Advertisement
Advertisement
மக்களுக்காக பேசுவதற்குதான் சட்டப்பேரவை. தினமும் ஒருவர் மற்றொருவர் மீது குறை சொல்வதால்தான் பேரவை நிகழ்வுகள் 6.30 மணி வரைக்கும் நடக்கிறது. எப்போதும் சண்டை போட்டுகொண்டுதான் இருக்கிறீர்கள். இதனால் தமிழக மக்களுக்கு என்ன பலன்?
இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஆட்சியாக இருந்தாலும் நன்றாகவே ஆட்சி செய்திருக்கிறார்கள். எந்த ஆட்சியையும் குறை சொல்ல முடியாது.
இன்று உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். மக்களும் நாங்களும் உறுதுணையாக இருக்கிறோம்.
வாக்குவாதம் என்பது ஓரளவுக்கு இருந்தால் ரசிக்கலாம். கடந்த 3, 4 நாள்களாக சண்டைதான் நடக்கிறது என்று மக்களே கூறுகிறார்கள்.
அதேபோல உறுப்பினர்கள், தேர்வுக்கு தயாராகி வருவதுபோல சட்டப்பேரவையில் பேச தயார் செய்துகொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் பேரவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரைக்கும் சட்டப்பேரவை அமைதியாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தால்தான் பேரவையில் சண்டையே தொடங்குகிறது. இது சட்டமன்றம். சண்டை மன்றம் அல்ல. அவரை பேச அனுமதிக்கக் கூடாது" என்றார்.
premalatha vijayakanth speech in tn assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.