FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டம் ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி திட்டம்

சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து இன்றைய சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர்... - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து இன்று கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் பல்வேறு துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.

இன்றைய சட்டப்பேரவையில் உள்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மதுவிலக்குத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று உள்துறை மீதான விவாதம் நடைபெறுவதால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, காவல் மரணங்கள் குறித்து கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் உள்துறை அமைச்சராக முதல்வர் விஜய் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Opposition parties plan to raise questions regarding law and order issues in the Legislative Assembly today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments