சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட 3 துறைகளில் மானிய கோரிக்கை விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திட்ட செயலாக்கத் துறை உள்பட 3 துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவது குறித்து...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திட்ட செயலாக்கத் துறை உள்பட 3 துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது.
இதுவரையில் வேளாண் பட்ஜெட், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்றைய (ஆக. 21) சட்டப்பேரவையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, சட்டத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
Debate on demands for grants for three departments in the Tamilnadu Legislative Assembly today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.