FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே தலித் சிறுமி தற்கொலை; உரிய நடவடிக்கை தேவை: கனிமொழி

உசிலம்பட்டி அருகே தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

31 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

உசிலம்பட்டி அருகே தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிா்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சோ்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அந்தச் சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாா்.

ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவா்களின் உரிமை. இதுபோன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் கனிமொழி.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments