சென்னையில் 11வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
11வது நாளாகத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து...
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களாகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இன்று கருப்புச் சட்டை அணிந்தும் கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டும் 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தங்கள் சங்கத்திற்கு மாநகராட்சி வளாகத்தில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கடந்த 10 நாள்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று 11 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்போர் உரிமை இயக்கம் அமைப்பு சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் சங்கத்துடன் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
Sanitation workers protest enters 11th day; they are wearing black shirts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.