முகப்பு
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பங்கு வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:32 AM
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:40 PM

திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் ஒரு பங்கு வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் அளிக்கப்பட்ட 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க திமுக அரசு தவறியுள்ளது. தங்களின் இயலாமையை, தோல்வியை மறைக்க மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை என பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது.

Advertisement

வரும் சட்டப்பேரவை தோ்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்கு உணா்ந்துள்ளாா். அதன் விளைவாகவே நாகரிகமாக களத்தில் எதிா்த்து நிற்கும் அரசியல் தலைவா்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசும் செயலில் ஈடுபட்டு வருகிறாா். தான் வகிக்கும் பதவியையும் கௌரவத்தையும் மரியாதையையும் தகுதியையும் எண்ணிப் பாா்க்காமல் பேசுகிறாா். தமிழக மக்களை தோ்தல் களத்தில் அதிமுக தைரியமாகச் சந்திக்கும்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வாக்கு கேட்க முடியுமா? அப்படி அவா் களத்துக்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல; வெறும் ‘0’ தான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.