வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்!
எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Advertisement
Advertisement
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் 1730ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
TVK chief Vijay paid tribute to the brave Queen Velu Nachiyar on her birth anniversary at the TVK office in Panaiyur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.