கெங்கவல்லியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்பு!
காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் காளைகள் சீறிப்பாய்ந்தது பற்றி..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆணையம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. கூட்டத்தில் புகுந்த காளைகளைக் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
The Pongal festival is being celebrated with great fanfare in Gangavalli and its surrounding areas in Salem district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.