விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை....
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு எ.வ. வேலு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் எ.வ. வேலு இன்று ஆஜராகவில்லை.
Advertisement
Advertisement
அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
எ.வ. வேலு சிங்கப்பூர் சென்ற நிலையில் அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். அவர் மேலும் சில நாள்கள் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலக்குறைவால் எ.வ.வேலு இன்று நேரில் ஆஜராக முடியாது என்றும் வேறு ஒரு நாளில அவர் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழக்கறிஞர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
E.V. Velu did not appear for inquiry by the Directorate of Vigilance and Anti-Corruption
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.