டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளதைப் பற்றி...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும். மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. கொண்டு வரப்படும். எஃப்எல்- 3 பார்களில் 21 வயதுக்குள்பட்டவர்களை அனுமதித்தால், பாரின் அனுமதி ரத்து செய்யப்படும். அதையும் நெறிமுறைபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Minister Vignesh stated that the Chief Minister has ordered a 25% salary hike for TASMAC employees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.