FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உணவுத் தானியங்களைப் பாதுகாக்க போதுமான கட்டமைப்பு தேவை: சீமான் வலியுறுத்தல்

உணவுத் தானியங்களைப் பாதுகாத்து வைக்க போதுமான அளவு நிரந்தரக் கட்டடங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:54 am IST
சீமான் - கோப்புப் படம்
பகிர்:

உணவுத் தானியங்களைப் பாதுகாத்து வைக்க போதுமான அளவு நிரந்தரக் கட்டடங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழக அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

Advertisement

Advertisement

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக்கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றது.

முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது. மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும். இது, கண்டனத்துக்குறியது.

எனவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத் தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டடங்களை உருவாக்கி, நியாயவிலைக் கடைகளில் ஏழை மக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments