மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவு: ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக ஓசூர் எல்லையில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி...
ஓசூர் அருகே மாநில எல்லை அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்புகள் சார்பில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட வேண்டும், பெங்களூர் மாநகரத்திற்கு குடிநீர் ஆதாரம் பெருக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னட செலுவளி மாநில தலைவர் வாட்டள் நாகராஜ் கன்னட ஜாக்ருதி வேதிகே மாநில தலைவர் தேவா, கன்னட ரக்ஷண வீதி மாநில தலைவர் நாராயண செட்டி ஆகியோர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில எல்லை பகுதியான அத்திப்பள்ளி ஆர்ச் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டிட வேண்டும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரத்திற்கு தேவையான குடிநீர் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.
Advertisement
Advertisement
கன்னட கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் அத்திப்பள்ளி போலீசார் பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து கன்னட அமைப்பினர் தமிழகப் பகுதிக்கு செல்லாதவாறு தடுத்து நிறுத்தினார்கள்.
மேலும் காலை முதல் மதியம் ஒரு மணி வரை தமிழக பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன.
அதைப்போல பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறநகர் பேருந்துகளான தமிழக மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இருசக்கர வாகனங்கள், கார், லாரி, மற்ற சரக்கு வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Kannada organizations protest at Hosur border to Support for Makedhatu dam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.