பக்தர்கள் கவனத்திற்கு.... பழனி ரோப் கார் சேவை 45 நாட்கள் இயங்காது!
பழனி கோயில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோயில் ரோப் கார் சேவை வருகிற 20ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.
2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட (ரோப்காா்) ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.
Advertisement
Advertisement
ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை ஒரு மாதம் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 20 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இயங்காது.
இதனால் பக்தர்கள் மாற்று வழிகளாக படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
It has been announced that due to annual maintenance work, the Palani temple rope car service will not operate for 45 days starting from the upcoming 20th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.