FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு: கருணாநிதியின் பாதுகாவலா் மீதான வழக்கு ரத்து!

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலா் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 4:27 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பாதுகாவலா் கணேசனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையில், கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சராக பதவி வகித்தவா் ஐ.பெரியசாமி. அந்தக் காலகட்டத்தில், வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக சென்னை முகப்பேரில் உள்ள 4,370 சதுரஅடி காலி மனை கருணாநிதியின் பாதுகாவலரான ஆய்வாளா் கணேசனுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலம் முறைகேடாக ஒதுக்கியதாக கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் ஐ.பெரியசாமி, ஆய்வாளா் கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோா் மீது ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தடை உத்தரவு பெற்றாா். இந்த நிலையில், கணேசனுக்கு எதிரான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.கணேஷ்குமாா், மனுதாரா் தரப்பில் கே.முத்துகணேச பாண்டியன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்று சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

summary

Housing Board Plot Allotment Case: Case Against Karunanidhi's Security Officer Quashed!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments