மூதாட்டி கால் விரலை கடித்த எலி! திருச்சி அரசு மருத்துவமனை விளக்கத்தால் அதிர்ச்சி
மூதாட்டி கால் விரலை எலி கடித்த சம்பவத்தில் திருச்சி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்திருப்பது பற்றி..
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு மருத்துவமனை அளித்த விளக்கம் இன்னும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்ததால், பெரிய காயங்களோ, ரத்தப் போக்கோ இல்லை. அவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் எலித் தொல்லை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் இவரது படுக்கைக்கு வந்த எலி ஒன்று, தமிழ் கொடியின் கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்துத் தேவையான தடுப்பூசியைச் செலுத்தினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் விஜயகுமார் கூறுகையில், அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. எனது தாய் சர்க்கரை நோயாளி என்பதால், அவரது காலில் எலி கடித்தது உடனடியாக அவருக்குத் தெரியவில்லை. தற்போது அவரது கட்டை விரலைச் சுற்றி மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், மூதாட்டி எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது.
ஜூலை 23ஆம் தேதி அதிகாலை மூதாட்டியின் கால் விரலை எலி கடித்தது. இதில் அவருக்கு ஆழமான காயமோ, ரத்தப் போக்கோ இல்லை. கால் கட்டை விரல் தோலில் சிராய்ப்புக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டி உடல்நிலை சீராக உள்ளது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rat bites elderly woman's toe! Shocking explanation from Trichy Government Hospital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.