அண்ணாமலை சந்திப்பு: நயினாருக்கு அழைப்புவிடுத்த தில்லி பாஜக தலைமை!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லி செல்லவுள்ளது பற்றி...
தில்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனை அண்ணாமலை சந்தித்ததையடுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று(ஜூன் 2) பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாகவும் தொடர்ந்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து இதுபற்றி விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தில்லி பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உடனடியாக தில்லிக்கு வர வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக பாஜக மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை பல விஷயங்களைப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அதுபற்றியும் பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றியும் நயினார் நாகேந்திரனிடம் பாஜக தலைமை பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.