முகப்பு
தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்கக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

Updated On : 7 ஜூன் 2026, 5:01 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அவரின் பேச்சுக்கு தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து, மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்மோகன் பேசியதாவது, "மு.க. ஸ்டாலின் அப்படி கூறியிருக்கக் கூடாது. அதனை அவர் தவிர்த்திருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரையில், சொன்னபடியே கூட்டணியில் இருப்பவர்களுக்கும் அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் அளித்திருக்கிறார்.

Advertisement

Advertisement

அமைச்சர் வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது, தனி மனிதனுக்கானது அல்ல; அது நீண்ட, நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஓர் அங்கீகாரம்.

அதுபோல, இந்திய விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக இந்திய முஸ்லீம் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது. இது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.

கூட்டணி என்கிற பெயரில், அவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு, அவர்களின் வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு, அவர்களுக்கான அங்கீகாரத்தை மட்டும் இவ்வளவு காலமாக தராமல் இருந்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் இதனை முதன்முறையாக முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.

summary

TVK Minister Rajmohan responds to DMK Chief MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.