முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் வருவாயில் மாதந்தோறும் ரூ.102 கோடி முறைகேடு! விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு

டாஸ்மாக் வருவாயில் மாதத்துக்கு ரூ.102 கோடி முறைகேடு நடந்ததாக வந்த புகார் மீது விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 8 ஜூன் 2026, 11:13 am IST
டாஸ்மாக் கடை - Center-Center-Chennai
பகிர்:

தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் வருவாயில், மாதந்தோறும் ரூ.102 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக கட்சி நிதி என்ற பெயரில் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் வருவாய் முறைகேடுகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வசூல் நடவடிக்கை மீது விரிவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுவதாவது, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் கட்சி நிதி என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தமிழக முதல்வர் விஜய்யிடம் கூறியதையடுத்து, புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடைய செயல்பாட்டைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது, நல்ல வருவாய் இருந்தாலும், தமிழக அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை மூடியிருக்கிறது.

summary

CM Vijay orders probe into alleged monthly fraud of Rs 102 crore in TASMAC revenue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.