முகப்பு
தமிழ்நாடு

நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் வைகோ பேசியது குறித்து...

Updated On : 8 ஜூன் 2026, 3:26 pm IST
செய்தியாளர் சந்திப்பில் வைகோ - எக்ஸ்
பகிர்:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ குளறுபடி விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 8) வலியுறுத்தினார்.

தில்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. மொத்தம் 25 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாஜகவின் வளர்ச்சியால் ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கூட்டணி உள்கட்சி முரண்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:

Advertisement

Advertisement

''இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் மனநிறைவாக அமைந்தது. நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் த்ர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 25 கட்சிகள் பங்கேற்றன'' என வைகோ குறிப்பிட்டார்.

summary

NEET, CBSE issue: Union Minister must resign Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.